நான் ரசித்த ஞாயிறு..


கடல் தாயின் மடியில்
கண் விழிக்கும் காலைக்கதிரவன்..
மலைகளின் பின்னே மறைந்திருந்து
எட்டிப்பார்க்கும் மாலைச்சூரியன்..
மேகங்களின் பின்னிருந்து கண்ணாமூச்சு ஆடும்
கார் காலக்கதிரவன்..
பசும் பயிர்களை செழிக்க வைக்கும் பகலவன்..
தென்னங்கீற்றுகளின் ஊடே சிதறித்தெரியும்..
சிகப்பு சூரியன்..
வட்டமாக ஜொலிக்கும் வண்ண சூரியன்..
கோடையில் மட்டும் அவன் கொடுஞ்சூரியன்..
அவன்....வானில் செய்யும் வர்ணஜாலம்..
மனதை மயக்கும் மாயாஜாலம்..
ஒளிரும் ஞாயிறின் எழில் மிகும் கோலங்களை
ஓர் கவிதையில் ஒளித்து விட முடியுமா?
எழுதுகோலில் விலங்கிட்டு
வார்த்தைகளில் தான் சிறை பிடிக்க முடியுமா?
g.mohanprabha
 cell:+919688971001