தன் குஞ்சுகளுடன் ஒரு கோழி.
கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான
கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு
பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும், ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது.
2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24
பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (
[1]). இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின்
இறைச்சிக்காகவும்,
முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின்
நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.
[